சஞ்சித்-ஆதர்ஷிகா.
தர்ஷினி, ஆதர்ஷிகா இருவரும் வெவ்வேறு வங்கியில் பணிபுரிபவர்கள்.
காதல் ரோஜாக்களை கையிலேந்தி தேவதைகளின் வருகைக்காகக் காத்திருக்கும் நாயகர்கள்.
அந்தத் தேவதைகளைத் தங்களிடம் வரவழைக்க, அவர்கள் செய்த தகிடுதத்தோம் வேலைகள் என்ன?
நட்பு, காதல், குடும்பம் என்று ரோஜாக்களின் வாசம் சற்றும் குறையாத காதல் கதை.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.