கல்லூரி விழா ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அமைதியாக, ஆனந்தமாக சென்று கொண்டிருந்த நாயகியின் வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்கள்.
போராட்டக் களத்தில் இருந்த நாயகிக்கு ஹர்ஷா கை கொடுத்தானா?
நட்பு காதலாக மாறிய விந்தை..!காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே..!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.